பாரதிராஜா இயக்கிய மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று என்னுயிர்த்தோழன் , அதைப்பற்றியும் , அதில் இளையராஜா இசையமைத்துப்பாடிய கானா பாடலைப்பற்றியும் இங்கே நாம் பார்க்கப்போவதில்லை . .. மாறாக என்னை எஸ்.எம்.எஸ்சிலும் ஈமெயிலிலும் இதுபோன்ற தகவல்களை அனுப்பி காண்டேற்றியவர்களை பதிலுக்கு காண்டேற்ற முடியாமல் போன ஆதங்கத்தில் , உங்கள் நேரத்தை வீணடிக்கவே இந்தப் பதிவு .
்
என்னுயிர் நண்பா உண்மைய சொல்லு , நேத்து நைட் நீ எங்கயிருந்த . நான் ஃபோன் பன்னப்ப ஒரு லேடி ” கஸ்டமர் பிஸின்னு” சொல்லுச்சே , இதெல்லாம் நல்லாவா இருக்கு ???
என்னுயிர்த்தோழா , செத்த பிறகும் சைட் அடிக்க மருத்துவம் காட்டிய வழி என்று கண் தானம் செய்வது பற்றி விளம்பரப்படுத்தியாக வேண்டுமா ??
என்னுயிர்த்தோழா , பீரடித்துக்கொண்டு காரோட்டாதே , பீரை சிந்திவிடுவாய் நீ .
என்னுயிர்த் தோழியே , நீ உன் நண்பர்களிடம் மூன்று மணி நேரத்திற்க்கு குறையாமல் செல்பேசுவதெல்லாம் சரிதான் , ஆனால் அதற்காக ராங் நம்பர் வந்தால் கூட அவர்களுடன் ஒரு மணி நேரம் பேச வேண்டுமா ???
என்னுயிர் நண்பா , BOSS என்பவர் மேகம் போன்றவர் , அவர் காணாமல் போகும் தினம் பிரகாசமாக இருக்கும்.
என்னுயிர் நண்பா , உன் கனவினைப்பொறுத்தே உன் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது , உடனே தூங்கச்செல் .
என்னுயிர் நண்பா , எல்லா ப்ரோஜெக்ட்களும் ஏழு நிலைகளை கடக்க வேண்டியிருக்கிறது , அவையாவன
- ஆழம் தெரியாமல் ப்ரோஜெக்டை ஒத்துக்கொள்வது
- எல்லோருக்கும் ஆர்வக்கோளாறை கிளப்புவது
- ப்ரோஜெக்ட் மேல் வெறுப்புத்தட்ட ஆரம்பிப்பது
- ஒட்டுமொத்தமாக எல்லாரையும் குழப்புவது
- தப்பு செய்தவனை தேடுவது
- அப்பாவிகளை தண்டிப்பது
- சம்பந்தமே இல்லாதவனை பதவி உயர்த்துவது .
== எப்போவாச்சும் தொடரும் ==
சுட்டது : SMS , ஈமெயில்கள்.்