பாலோ கொயல்ஹோ பற்றி அன்பர்கள் பலருக்கு தெரியும் என்று நினைக்கிறேன் . தமிழில் நமக்கு பாலகுமாரன் போல லத்தீன் அமெரிக்காவுக்கு அவர் .
அவரது ப்ளாக் ஒன்றில் வெளியான பாயின்ட்டுகள் இவை , ஓரளவு ஒத்துவருவதை தமிழ்ப்ப்டுத்தியிருக்கிறேன் . ஒரிஜினல் லிங்க் கீழே கொடுத்திருக்கிறேன் .
சில விஷயங்கள் ” மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்”ல் பார்த்தது போலவே இருக்கும் .
” இயல்பு ” என்றால் என்ன என்று சமூகம் வரையறுத்திருக்கும் விஷயங்கள் சில .
1] நமது உண்மையான தனித்தன்மையையும் கனவுகளையும் மறக்கச்செய்து , வேலை செய்வதே கடனுக்குஎன்ற நிலையில் உழல்வது
3] வருடக்கணக்கில் பல்கலைக்கழகங்களில் சுற்றிவிட்டு வேலை கிடைக்காமல் சுற்றுவது
5] 30 வருடத்திற்க்கு பிறகு நாம் ஓய்வெடுக்கலாம் என்பதற்க்காக தினமும் 9′லிருந்து 5 வரை , கொஞ்சம்கூட நமகு சந்தோஷம் தராத வேலையை செய்வது ,
5] ரிடையராகும் காலத்தில்தான் நமக்கு இதற்க்கு மேல் வாழ்க்கையை அனுபவிக்கும் அளவுக்கு தெம்பில்லை என்று உணர்வதும் , அதில் போரடித்து சில வருடங்களில் பூமிக்கு டாடா காட்டுவதும்
7] சந்தோசத்தை தேடாமல் பொருளாதார வெற்றியை தேடுவது
8] அப்படி காசை தேடாமல் சந்தோஷத்தை தேடுபவர்களை இலக்கற்றவர்கள் என எள்ளி நகையாடுவது
9] ஏன் இந்த வாழ்க்கை நமக்கு கிடைத்திருக்கிறது என்று வாழ்க்கைக்கான அர்த்தத்தை காணாமல் கார் , வீடு , சொத்து என்று ஒப்பிட்டு வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிப்பது [ பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கை ]
11] பெற்றோர் எப்பொழுதுமே சரியாகத்தான் சொல்வார்கள் என நினைப்பது
12] இந்த ” இயல்புகளுக்கு ” விதிவிலக்காக உள்ள எல்லாரையும் விமர்சிப்பது
14] ஒரு அலாரம் நமது விழிப்பை நிர்னயிப்பது .
15] அச்சிடப்பட்ட அனைத்தையும் நம்புவது .
18] வாய்விட்டு அழத்தோன்றும் நேரத்தில் சிரிப்பது .
13] அக அழகுக்கு மட்டும் செலவு செய்துவிட்டு புற அழகை கண்டுகொள்ளாமல் விடுவது .
32 ] பசிக்கவேயில்லையென்றாலும் நேராநேரத்துக்கு சாப்பிடுவது .
39 ] வாழ்க்கையில் ரசித்து செய்யவேண்டிய விஷயங்களை , அதை செய்யும் தெம்பில்லாமல் போகும்வரை தள்ளிவைப்பது .
இவைகூட நாம் இன்னும் நமது கலாச்சாரத்திற்க்கு தகுந்தது போல மாடிஃபை செய்து சில பாயிண்டுகளை சேர்க்கலாம் ..
உதாரனத்திற்க்கு
x] புறநகரில் நிலம் வாங்கி , ஒரு மாடிவீடு் கட்டி , அதற்க்கு மஞ்ச கலரில் பெயிண்ட்டடித்து வாசலில் ஈஸிசேர் போட்டு பேப்பர் படிப்பது் தான் வாழ்க்கையில் அதிக பட்ச இலட்சியம் என்று நினைப்பது .
x] சப்ஜெக்ட் கவர்கிறது என்பதற்காக் படிக்காமல் மார்க்குக்காகவும் அதை வைத்து கிடைக்கக்கூடிய வேலைக்காகவும் விருப்பப் படிப்புகளை தேர்ந்தெடுப்பது . .
x] . .
இன்னும் எழுதிக்கொண்டேபோகலாம் . உங்களுக்கு தோண்றுவதை பின்னூட்டமிடுங்கள்
சுட்ட இடம் : பாலோ